8 ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தனக்கு பிடித்த வேப்பமரத்தை வெட்டியதால் வனத்துறைக்கு போன் செய்து புகார் அளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானா :
தெலுங்கானாவில் அரசு அறிவித்த டோல் ஃப்ரீ எண்ணுக்கு போன் செய்த சிறுவன், தான் ஒரு பசுமை ஆர்வலர் என்றும், தன் வீட்டுக்கு அருகில் இருந்த 40 வருட பெரிய வேப்பமரத்தை வெட்டிவிட்டதாக 8 ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் தனக்கு பிடித்த வேப்பமரத்தை வெட்டியதால் வனத்துறைக்கு போன் செய்து புகார் அளித்துள்ளார்.
அந்த சிறுவன் அளித்த புகாரின் பெயரில் வனத்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விசாரணைக்கு வந்துள்ளனர். அங்கு புதிதாக கட்டும் கட்டிடத்திற்கு எதிரே இடையூறாக இருந்த வேப்பமரம் வெட்டப்பட்டது தெரியவந்தது.
Read more – நான் இங்கு சுகம்.. நீங்கள் அங்கு நலமா ? சசிகலா உடல் நலம் குறித்து போனில் விசாரித்த ரஜினிகாந்த்
இதனையடுத்து மரத்தை வெட்டிய நபருக்கு ரூ.62ஆயிரத்து 75 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், 40 ஆண்டுகால மரம் என்பதால் அதை வெட்டுவதற்கு முன்பு அனுமதி பெற வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என வனத்துறை தெரிவித்தும் வந்துள்ளது.
8 ம் வகுப்பு படிக்கும் மாணவனின் சமூக ஆர்வத்தை பார்த்து வனத்துறையினர் அந்த சிறுவனுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.