மும்பை போலீசார் ஒரு வீட்டில் இருந்து 6 அடி நீள பாம்பை பிடித்த வீடியோ நெட்டில் வைரலாகி வருகிறது.
மும்பை :
ஆறு அடி மலைப்பாம்பு ஒன்று சமீபத்தில் மும்பையில் உள்ள தாராவி பகுதியில் ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருந்து அனைவரையும் பீதிக்குள்ளாக்கியது. பிறகு வீட்டின் மேற்ப்பகுதியில் சுற்றியிருந்த பாம்பை கான்ஸ்டபிள் வெளியே எடுப்பதை காணலாம். கான்ஸ்டபிள் முரளிதர் ஜாதவ் இந்த மலைப்பாம்பை வெறும் கைகளால் பிடிப்பதை இதில் காணலாம்.
மும்பை போலிஸின் கூற்றுப்படி, ஒரு பெரிய மலைப்பாம்பு தாராவியில் இருந்த வீட்டிற்குள் பதுங்கி கொண்டதோடு வீட்டை சுற்றி உள்ளவர்களையும் பயமுறுத்தியுள்ளது. இதனால் அவர்கள் உதவிக்காக காவல் துறையை தொடர்பு கொண்டுள்ளனர். இதனால் போலீச் கான்ஸ்டபிள் முரளிதர் யாதவ் என்பவர் பாம்பை மீட்பதற்காக சம்பவ இடத்தை அடைந்தார். அவருடைய கால் முறிந்து இருந்த நிலையிலும் மீட்பு நடவடிக்கையில் தலைமை தாங்கியதற்காக அவர் பாராட்டபட்டார்.
“எலும்பு முறிந்த நிலையிலும் முரளிதர் யாதவ் தனது கடமையை செய்ய தவறவில்லை. அவர் மலைப்பாம்பை மீட்டு வனத்துறையின் உதவியோடு அதன் இயற்கை வாழ்விடத்தில் கொண்டு சென்று விட்டார்” என்று மும்பை காவல் துறை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இவர் பாம்பை மீட்ட வீடியோவானது இணையத்தில் 10,000 தடவைகளுக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளன. பலர் அவர் மலைப்பாம்பை காப்பாற்றியதற்காக நன்றி தெரிவித்தனர். பாம்பை மீட்கள் திரு ஜாதவ் மேற்கொண்ட முயற்சிகளுக்காக மகாராஷ்ட்ராவின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அவரை பாராட்டினார். “சரியாக நிலைமையை கையாள அவர் காட்டிய துணிச்சலும் தைரியமும் மற்ற காவலர்களுக்கு முன் மாதிரியாக அமைந்தது” என தனது டிவிட்டர் பக்கத்தில் திரு அனில் தேஷ்முக் தெரிவித்திருந்தார்.