கல்பாக்கத்தில் ஒரு பெண் மர்மமாக இறந்து கிடந்ததை கண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்பாக்கம் அடுத்து உள்ளது பூந்தண்டலம் எனும் கிராமம். அங்கு இருந்த சுடுகாட்டில் திடீரென்று ஒரு பெண் நயிட்டி அணிந்த நிலையில் தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண்ணின் சடலம் இருந்த இடத்தை சோதனை செய்து பார்த்தபோது அங்கு அருகில் சில பீர் பாட்டில் இருந்ததை கண்டறிந்தனர்.
அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்து வரும் நிலையில் அந்த பெண் யார்? எப்படி அவர் சம்பவ இடத்திற்கு வந்திருக்க முடியும்? இவரை காணவில்லை என்று யாரவது புகார் தெரிவித்துள்ளாரா என்பது போன்ற விசாரணைகள் நடத்தி வருகின்றனர். மேலும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அந்த பெண் அடித்து கொலை செய்யப்பட்டரா ? எனும் கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.