அருப்புக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு 35 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை பகுதியில் கணேஷ் நகரில் ராம் குமார என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி நகர் பகுதியில் பசுமை காய் கறி கடை ஒன்றை இவர் நடத்தி வருகிறார். அவருக்கு ஒரு மனைவி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவருடைய மனைவி தன் இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத 4 பேர் திருமண அழைப்பிதழ் தருவதனாக கூறி வீட்டிற்குள் நுழைந்தனர்.
பின்னர் அவர்கள் திடீரன்று ஜெயகிருபாவை கட்டிபோட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் நகையை பறித்துள்ளனர். அதனை தொடர்ந்து வீட்டில் பீரோ சாவியை கேட்டுஉள்ளனர். அதனை ஜெயகிருபா தர மறுத்துள்ளார். அப்போது அவரின் இரண்டு குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர். அதனால் பதட்டம் அடைந்த ஜெயகிருபா தன் பீரோ சாவியை அவர்களிடம் தந்துள்ளார்.
அதன் பின் அந்த மர்ம கும்பல் பீரோவில் இருந்த 30 சவரன் நகையை வாரி சுருட்டி ஒரு பையில் போட்டுகொண்டு வீட்டை வெளியில் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் பூட்டை திறந்து ஜெபகிருபா மற்றும் இரண்டு குழந்தைகளை மீட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் மோப்பநாயுடன் வந்து தடயங்களை சேகரித்தனர்.