அசாம் பாஜக வேட்பாளர் ஒருவர் வாக்குப்பதிவு எந்திரத்தை காரில் பதுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் :
மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் கடந்த மாதம் 27 ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக நேற்று 2 ம் கட்ட தேர்தல் மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. மேற்குவங்கத்தில் மொத்தம் 30 தொகுதிகளிலும், அசாம் மாநிலத்தில் 39 தொகுதிகளில் நடைபெற்ற இந்த தேர்தலானது பெரும் பரபரப்பு சூழலை கடந்து நடந்து முடிந்தது.
Read more – இன்றைய ராசிபலன் 02.04.2021!!!
இந்தநிலையில், வாக்குபதிவு நடந்து முடிந்த சில மணி நேரங்களிலேயே பாத்தார்கண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கிருஷ்னேந்து பாலின் காரில் இருந்து ஒரு வாக்குப்பதிவு எந்திரந்தை காவல் துறையினர் கைப்பற்றினர். வெள்ளை நிற காரில் இருந்து அந்த வாக்குப்பதிவு எந்திரத்தை அதிகாரிகள் கைப்பற்றும் வீடியோ ஆதாரத்தை அம்மாநில மூத்த பத்திரிகையாளர் அதனு பூயான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நாட்டையே திரும்பி பார்க்க செய்தார்.
மேலும், அசாம் மாநில தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்து, பாஜக வேட்பாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலை புறக்கணிப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தற்போது வரை அம்மாநில தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவினர் எந்தவொரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.