டெல்லியில் நடக்கும் வேளாண் விவசாய போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாயிகளுடன் 15 ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது.
புதுடெல்லி:
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைப்புற சாலைகளில் தொடர்ந்த போராட்டம் இன்று 17-வது நாளாக நீடிக்கிறது.
ஏற்கனவே மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்திய பொழுதும்,அதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.இந்த நிலையில் விவசாயிகள் இந்த போராட்டத்தை இன்னும் தீவிர படுத்த வரும் 14 ம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டத்தை கொண்டு செல்ல முயற்சிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில்,டிசம்பர் 15 ம் தேதி விவசாய அமைப்பினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைத்துள்ளது. டெல்லி ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையை தடுத்து மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்து, டெல்லி நோக்கி ஏராளமான விவசாயிகள் டிராக்டர்களில் அணித்து வகுத்து வருகின்றனர்.விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக டெல்லி ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.