தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு பாஜகவின் மூத்தத் தலைவர் பிரேந்தர் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 24 – நாள்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவளித்து வரும் நிலையில் ஹரியாணா பாஜகவின் மூத்தத் தலைவராக அறியப்படும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரேந்தர் சிங் ஆதரவு அளித்துள்ளர்
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் பொருளாதார நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சுவதால் விவசாயிகளுடன் நிற்பது தார்மீக பொறுப்பு என பிரேந்தர் சிங் கூறியுள்ளார்.
read more – அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு : முதல்வர் அறிவிப்பு
தில்லி எல்லையில் உள்ள ஹரியாணா பகுதிகளில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திலும் தான் ஈடுபடப் போவதாக பிரேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.