பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் துண்டுசீட்டுடன் பறந்து வந்த புறாவை பாதுகாப்பு படையினர் சிறைப்படுத்தியுள்ளனர் .
இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் இருந்தே பாகிஸ்தான் உடனான எல்லை பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்தியாவின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதற்கு தக்க பதிலடியை இந்திய பாதுகாப்புப்படையினர் கொடுத்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், அண்மையில் புறா ஒன்று காலில் கட்டப்பட்ட துண்டுச்சீட்டுடன், பஞ்சாப் பகுதியில் அமைந்துள்ள ரோரோவாலா பகுதிக்குள் நுழைந்துள்ளது. மேலும், நீண்ட தூரம் அந்த புறா பறந்து வந்ததால் இளைப்பாற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவரின் தோளில் அமர்ந்துள்ளது. அந்த புறாவின் காலில் கட்டப்பட்டிருந்த துண்டுசீட்டை பார்த்து ஆச்சர்யப்பட்ட அவர் அதில் ஒரு குறிப்பிட்ட செல்போன் நம்பர் இடம்பெற்று இருந்தது.
Read more – இன்றைய ராசிபலன் 23.04.2021!!!
இதையடுத்து அந்த நம்பரை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்த வீரர்கள், புறாவை பஞ்சாப் மாநில போலீசாரிடம் ஒப்படைத்து அந்த புறாவின் மீது வழக்கு பதிய கூற அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் இந்தியாவிற்குள் மனிதர்கள் ஊடுறுவினால் கைது செய்யலாம். ஆனால் ஒரு புறாவை எப்படி கைது செய்வது என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
தொடர்ந்து அந்த புறாவை ஒரு கூண்டுக்குள் அடைந்து துண்டுசீட்டுக்குள் இருந்த நம்பரை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை பாகிஸ்தான் நம்பர் என்பது மட்டுமே உறுதியாகி உள்ளது.