வேளாண் சட்டங்களை ரத்து செய்ய இன்னும் எத்தனை விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்யவேண்டும் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி:
வேளாண் மசோதா சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி மற்றும் அதன் எல்லை பகுதிகளில் பஞ்சாப்,ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 18 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.மத்திய அரசு ஏற்கனவே 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கான தீர்வுகள் இதுவரை எட்டப்படவில்லை.இதனைத்தொடர்ந்து நாளை(டிச.14) நாடுமுழுவதும் போராட்டங்களை தீவிர படுத்த விவசாய அமைப்பினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தில் இதுவரை 11 விவசாயிகள் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Read more – இன்றைய ராசிபலன் 13.12.2020!!!
அதனைத்தொடர்ந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு விரும்பினால், நாங்கள் தயார். ஆனால் 3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்ற எங்களது கோரிக்கை நிறைவேற்றினால் மட்டுமே இந்த போராட்டம் முடிவு பெரும் என்று விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.மேலும் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் நாளை (டிச.14) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த போராட்டம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,“வேளாண் சட்டங்களை ரத்து செய்ய இன்னும் எத்தனை விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.