டெல்லியில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் முதல் மெட்ரோ ரயில் இயக்கத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி:
டெல்லியில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் முதல் மெட்ரோ ரயில் இயக்கத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.இந்த தொடக்க விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மெட்ரோ ரயில் சேவையில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் ரயில் சேவை டெல்லியில் சுமார் 37 கி.மீ. தூரம் கொண்ட மெஜந்தா நிற லைன், பிங்க் நிற லைனில் மஜ்லிஸ் பூங்கா முதல் ஷிவ் விஹார் வழித்தடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Read more – காவி உடையணிந்த வள்ளுவர் படம் தவறுதலாக ஒளிபரப்பப்பட்டது : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
இந்த மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, தொழில்நுட்பங்களை நோக்கிய வளர்ச்சியில் இந்தியா எவ்வளவு வேகமாக நகர்கிறது என்பதற்கு இந்த விழா ஒரு எடுத்துக்காட்டு என்று தெரிவித்தார்.அதனுடன், அனைத்து வழித்தடங்களில் பயணிகள் பயணிக்கும் வகையிலான தேசிய பொது பயண அட்டையையும் அறிமுகப்படுத்தினார்.
இந்த பயண அட்டை மூலம், பஸ் பயண கட்டணம், பிற மார்க்கங்களில் பயணிக்கலாம்.மேலும், வாகன நிறுத்துமிட கட்டணம், சில்லரை வர்த்தகம் போன்றவைகளுக்கும் இந்த பயண அட்டையை பயன்படுத்தலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.