இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்காக மவுனம் கலைக்க வேண்டும் என்று பிரியங்கா சோப்ராவிடம் மியா கலீபா கோரிக்கை வைத்துள்ளார்.
புதுடெல்லி :
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மியா கலீபா கருத்து தெரிவித்து இருந்தனர். பாப் நட்சத்திரம் ரிஹான்னா, நடிகை சூசன் ஆகியோரும் கருத்தை வெளியிட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கினர்.
Read more – இன்றைய ராசிபலன் 09.02.2021!!!
நடிகை மியா கலீஃபா தற்போது பிரியங்கா சோப்ராவின் மவுனம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் பிரியங்கா சோப்ரா எந்த நேரத்தில் எப்பொழுது பேச போகிறார்? எனக்கு ஆர்வமாக உள்ளது. பெய்ரூட் பேரழிவு அதிர்வுகளின் போது இருந்த ஷகிராவின் மவுனம் போல இது உள்ளது என்றார்.
ஆனால், கடந்த டிசம்பர் மாதம் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ‘ எங்கள் விவசாயிகள் இந்தியாவின் உணவு வீரர்கள். அவர்களின் அச்சங்கள் நீக்கப்பட வேண்டும். அவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும். வளர்ந்து வரும் ஜனநாயகம் என்ற வகையில், இந்த நெருக்கடிகள் விரைவில் தீர்க்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.