Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

“ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுங்க” என வாட்ஸ் அப்-ல் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் தற்கொலை

October 19, 2020
புதுவை மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன் தொல்லையில் சிக்கியவர், தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Gambling

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் 36 வயதான விஜயகுமார். தனியார் செல்போன் ரீசார்ஜ் கூப்பன் வினியோகஸ்தராக இருந்த இவருக்கு, மதுமிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டம் பற்றி அறிந்து அதில் விளையாட தொடங்கிய விஜயகுமாருக்கு, ஆரம்பத்தில் வெற்றி பெற்று பணம் சம்பாதிக்கவே, சூதாட்டத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அதனை விளையாடி வந்ததில், கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை இழக்க ஆரம்பித்துள்ளார் விஜயகுமார். ஒரு கட்டத்திற்கு மேல் சூதாட்டத்தில் இருந்து வெளியே வர முடியாமல், அதற்கு அடிமையும் ஆகிவிட்டார், விஜயகுமார்.

மாஜிஸ்ரேட் விசாரணைக்கு உத்தரவு!

தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர் வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதம்!!

பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம்: மாமனார் வீட்டில் கணித ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

இந்நிலையில், மனைவியின் நகைகளை வைத்தும், வியாபாரத்திற்கு வைத்திருந்த பணத்தை வைத்தும், பலரிடம் கடன் பெற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டார். கடன் கொடுத்தவர்கள், பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்த நிலையில், அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்து வந்தார் விஜயகுமாருக்கு, தொழிலையும் சரியாக நடத்த முடியவில்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று முன்தினமும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, மனைவியிடம் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்ற விஜயகுமார், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். அவரது செல்ஃபோனை தொடர்பு கொண்டும், பேச முடியவில்லை.

இதுக்குறித்து, கரிக்கலாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார் மதுமிதா. அப்போது ஏரிக்கரை ஒன்றில் ஆண் பிணம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பிணத்தின் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று நின்றதை கண்டு, அதனுடைய பதிவு எண் கொண்டு விசாரித்தபோது, அது விஜயகுமாருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது. எனவே எரிந்த நிலையில் பிணமாக கிடப்பது விஜயகுமார் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதன்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதனால் ஏற்பட்ட கடன் தொல்லையால் அவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் விஜயகுமார், கடைசியாக தனது செல்போனில் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுமாறு பதிவிட்டு இருந்தார். அவரது மனைவிக்கு கடைசியாக அனுப்பிய வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜ்-ல், என்னுடைய பிணத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் நிற்கும் என்று அனுப்பியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன் தொல்லையால் விஜயகுமார் தற்க்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலாவது நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் மத்தியில் கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களால், குடும்பமே ஆதரவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதை உணர்ந்து, எதையும் ஒரு அளவிற்கு மேல் போகவிடாமல் தடுப்பது, நம் கையில்தான் உள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தமிழ் பேச விரும்பும் தலைவி பட நாயகி கங்கணா ரனாவத்!!

Next Post

மேலும் ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

Next Post

மேலும் ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version