நாடு முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் முன்னுரிமை அடிப்படையில் முதற்கட்டமாக மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், மூத்த குடிமக்கள் என 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ‘கோவிட் – ஷீல்டு’ தடுப்பூசியின் அவசர பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு ஒத்திகை பார்க்கும் விதமாக இன்று நாடுமுழுவதும் 2 மணி நேரம் ஒத்திகை நடைபெற்றது.
இந்தநிலையில், டெல்லியில் உள்ள ஒரு மையத்தில் தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் சுமார் 259 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.