பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதற்காக விவசாயிகள் புறப்பட்டு வருகின்றனர்.
புதுடெல்லி :
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடும் குளிர் மற்றும் மழைக்கு இடையில் கடந்த நவம்பர் மாதம் 26 ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். 3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர். அதே நேரம் சட்டங்களை திரும்பப்பெறுவதை தவிர வேறு கோரிக்கைகளை பரிசீலிக்க தயார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Read more – ஒடிசாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: பெற்ற மகளை கூலிப்படை வைத்து கொலை செய்த தாய்
விவசாய அமைப்பினருடன் இதுவரை நடத்திய 8 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் 10 வது சுற்று பேச்சுவார்த்தை நாளை விக்யான் பவனில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் நடைபெறுகிறது.
இதற்கிடையில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்பட்டுள்ளனர். மொத்தம் ஒரு லட்சம் டிராக்டர்கள் டெல்லியில் குவிந்து வருகின்றனர். மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் குடியரசு தினத்தன்று, திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் ஈடுபவர்களுக்கு தேசிய புலனாய்வு சம்மன் அனுப்பி வருவதற்கு விவசாய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.