டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.
டெல்லி :
நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். முதன் முதலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுகாதார பணியாளர் மணீஷ் குமாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், இன்று தான் மகிழ்ச்சியும், திருப்தியும் அடைந்திருப்பதாகவும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி பயனளிக்கும் என்றும் தெரிவித்தார்.
டெல்லியில் 75 மருத்துவமனைகளில் கோவிஷீல்டு தடுப்பூசியும், 6 மருத்துவமனைகளில் கோவேக்சின் தடுப்பூசியும் போடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.