இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்தக் கொரொனா தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய மார்ச் 24 ஆம் ஆண்டு பொது ஊரடங்கை அறிவித்தது. இதன்படி தற்போது 5 வது கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 75,50,273 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 114 610 ஆக அதிகரித்துள்ளது.
கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் குணமானவர்களின் எண்ணிக்கை 6,663,608 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 7,72,055 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 687400 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கொரொனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 637637 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரொனாவால் 10,642 பேர் உயிரிழந்துள்ளனர்.