‘மாஸ்டர்’ படத்தின் லீக் செய்யப்பட்ட காட்சிகளுக்கு படக்குழு நஷ்ட ஈடு கேட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி என பலரும் நடித்து கொரோனா காலத்துக்கு பின்பு ஒரு வருடம் கழித்து தியேட்டரில் வெளியான படம் ‘மாஸ்டர்’.
ரசிகர்கள் பலரின் எக்கச்சக்கமான எதிர்ப்பார்ப்புகளோடு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. உலக அளவில் 20 மில்லியனுக்கும் அதிகமான வசூலோடு சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு படத்தின் சில காட்சிகளை ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் இணையத்தில் வெளியிட இது படக்குழுவுக்கு அதிர்ச்சியான விஷயமாக இருந்தது. ஆனாலும் காட்சிகளை இணையத்தில் வெளியிட்டவரை காவல்துறை கைது செய்தனர்.
READ MORE- சூர்யாவுடன் இணையும் ‘சிறுத்த’ சிவா!
இதனையடுத்து படக்காட்சிகளை சட்ட விரோதமாக வெளியிட்டதற்காக தனியார் நிறுவனத்திடம் 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு படத்தயாரிப்பாளர் லலித்குமார் வழக்கு பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.