கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நட்சத்திரம் நம்ம தல அஜித்குமார், வாலி பட விவகாரத்தில் அவருக்கும் S.J.சூர்யா விற்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
சென்ற வருடம் போனிகபூர் கூட்டணியில் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் நேர்கொண்டபார்வை. இந்த வெற்றியை வைத்து மீண்டும் போனி கபூர் மற்றும் அஜித்குமார் இணைந்து “வலிமை” படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனாவால் படபிடிப்பு தள்ளி போய் கொண்டு இருக்கிறது.
அஜீத் குமார் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் தொடர்ந்து நடித்து வருவதால், அஜித் குமார் தற்போது போனி கபூரின் குடும்பத்தில் ஒரு நபராக பார்க்கப்படுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்த நிலையில் 1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்து ஹிட்டான வாலி படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை போனி கபூர் பெற்றுள்ளார். அதனுடன் சேர்ந்து வரலாறு படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தையும் பெற்றுள்ளார். இதனை “பப்ளிக் நோடிஸ்ஸாக” நாளிதழில் கொடுக்கப்பட்டதாம், இதனை அறிந்த S.J.சூர்யா ஷாக்காகி உள்ளார்.
அதாவது தனக்கும் இதில் பங்கு இருப்பதாக கூறி போனி கபூர் உடன் தொடர்பு கொண்டு 40% வாலி படத்தில் தனக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளாராம். இதனைக் கேட்டு போனிகபூர் யோசித்து சொல்கிறேன் என்று தெரிவித்து விட்டாராம்.இதனை அறிந்த அஜீத் தரப்பு S. J. சூர்யா மேல் அதிருப்தியில் உள்ளதாம்.