தளபதி விஜய்யின் தந்தையான அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் பெயரில் கட்சி ஒன்றை ஆரம்பித்தார். விஜய் மக்கள் இயக்கத்தை அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கமாக மாற்ற உள்ளதாகவும், அதற்காக தேர்தல் ஆணையத்தில் அந்த பெயரை பதிவு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் கடுப்பான விஜய், “தனது தந்தை ஆரம்பித்துள்ள கட்சிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், அதில் தனது ரசிகர்கள் சேரக்கூடாது என்றும் கட்டளை விடுத்தார். அதுமட்டுமின்றி தனது பெயரையோ புகைப்படங்களையோ பயன்படுத்தினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்” என்றும் அப்பாவுக்கே எச்சரிக்கை விடுத்தார்.
இந்த பிரச்சனைகள் தீவிரமாக போய்க்கொண்டிருந்த சமயத்தில் எஸ்.ஏ.சி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து அவருடைய மனைவி சோபா சந்திரசேகர் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் அவருடைய விஸ்வாசியும், அகிய இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவரான ராஜா கைது ஆகிய சம்பவங்கள் எஸ்.ஏ.சி.க்கு பின்னடைவை கொடுத்தது. இதையடுத்து விஜய் பெயரில் கட்சி ஆரம்பிக்கும் முடிவை கைவிட்டார்.
தற்போது மீண்டும் வேறொரு பெயரில் எஸ்.ஏ.சி. கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு ‘அப்பா எஸ்.ஏ.சி.மக்கள் இயக்கம்’ என பெயர் வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்கு இடையில் விஜய்யின் ஆதரவு தனக்கு இருப்பதாக காட்டிக்கொண்ட எஸ்.ஏ.சி., கிறிஸ்துமஸ் அன்று விஜய் தன்னை சந்தித்ததாகவும், தங்க மோதிரம் பரிசளித்ததாகவும் அளந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் எஸ்.ஏ.சி. பேசியது அனைத்துமே சுத்த பொய் என்பது தற்போது வெளியாகியுள்ளது.
Read more – திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் தற்கொலைக்கு சமம் : தமிழக அரசுக்கு இளம் மருத்துவர் கடிதம்
முதல் தகவலின் படி, கிறிஸ்துமஸ் அன்று விஜய் சென்னையிலேயே இல்லையாம், அப்புறம் எப்படி எஸ்.ஏ.சியை சந்தித்து மோதிரம் பரிசளிக்கும் முடியும் என விஜய் தரப்பில் கூறியுள்ளனர். மற்றொன்று அப்பா எஸ்.ஏ.சி. அரசியல் வேலைகளில் இறங்கியது சுத்தமாக பிடிக்காததால் அவருடைய செல்போன் எண்ணையே விஜய் பிளாக் செய்துள்ளாராம். கடந்த 6 மாதமாக அப்பாவுடன் விஜய் போனில் கூட பேசுவது கிடையாது என்கிறது நம்ப தகுந்த வட்டார தகவல்கள். சொந்த அப்பாவின் அரசியல் செயல்பாடு பிடிக்காமல் அவர் நம்பரையே தளபதி பிளாக் செய்துவிட்டார் என்றால், அந்த கட்சியில் சேர நினைக்கும் ரசிகர்களுக்கு என்ன மாதிரியான ஆப்பு காத்திருக்கும் என பரவலாக பேச்சு எழுந்துள்ளது.