மாரி செல்வராஜ்ஜின் இயக்கத்தில் நடிகர் தனுஷின் ‘கர்ணன்’ படப்பிடிப்பு முடிந்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கர்ணன்’.
உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது. ஷுட்டிங் தொடங்கி பரபரப்பாக நடந்து கொண்டிருந்த போதுதான் கொரோனா சூழல் வந்ததால் ஷூட் தடைப்பட்டது.
READ MORE- கமலுடன் இணையும் பஹத்ஃபாசில்!
அதன் பிறகு, தற்போது பாதுக்காப்போடும் அரசு விதிமுறைகளோடும் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. கொரோனா சூழலுக்கு முன்பாகவே பத்து சதவிகித படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருந்த நிலையில், தற்போது அது முடிந்துள்ளது.
படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். படப்பிடிப்பு முடிந்துள்ளது என மாரி செல்வராஜூடன் படப்பிடிப்பில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து தனுஷ் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.