சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் 290 செனட்டர்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் துணை ஜனாதிபதியாக தமிழக வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதை தமிழர்கள் கொண்டாடி வரும் சூழ்நிலையில் மேலும் ஒரு தமிழருக்கு முக்கிய பொறுப்பை அளித்துள்ளார் ஜோ பைடன் அவர் அமைத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவில் இந்தியரான டாக்டர் செலின் கவுண்டர் என்கிற செலின் ராணி கவுண்டர் இடம்பிடித்திருக்கிறார். 43 வயதாகும் செலின் கவுண்டர், அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சியாளராக இருக்கின்றார். அமெரிக்க காசநோய் தடுப்பு பிரிவு உதவி இயக்குனராகவும் பதவி வகித்து வருகிறார்.
இவரது தந்தை நடராஜ், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர். தங்கள் கிராமத்து பெண், அமெரிக்க நாட்டில் ஓர் உயரிய பொறுப்பில் வந்து இருப்பது இந்த கிராமத்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
நேற்று டாக்டர் செலின் குறித்த செய்தி அறிந்து, மொடக்குறிச்சி பெருமாபாளையம் பகுதியில் உறவினர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். தூரபாளையம் கிராமத்தில் வசித்துவரும் டாக்டர் செலினின் பெரியப்பா மகள் அன்னபூரணி, கிராமத்து மக்களுக்கு இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.இதுவரை 4 முறை அவர் மொடக்குறிச்சிக்கு வந்து உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.