அமெரிக்கா இன்று தனது நாட்டின் 45 வது அதிபரை தேர்ந்தெடுக்க வாக்களித்து கொண்டு இருக்கிறது.
அமெரிக்காவில் தேர்தல் 1 முதல் 8 தேதிக்குள் செவ்வாய்கிழமையில் நடைபெறும். அதை போல் இன்று நவம்பர் செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்று இருக்கிறது.
இந்த தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த ஜோ பிடனும் ஜனநாயக கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்பும் மோதுகின்றனர்.
அமெரிக்க அதிபர் எப்படி தேர்வாகிறார்?
1.தேர்தலில் போட்டியிடுபவர் அமெரிக்காவில் பிறந்திருக்க வேண்டும்.
2.குறைந்தபட்ச வயது 35 க்குள் இருக்க வேண்டும்.
3.14 ஆண்டுகளாவது அமெரிக்காவில் வாழ்ந்திருக்க வேண்டும்.
4.கட்சிக்குள் நடக்கும் வாக்கெடுப்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
5.தேசிய மாநாட்டில் அதிபர் மற்றும் துணை அதிபருக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.
6.கட்சிகளால் அறிவிக்கப்படும் வேட்பாளர்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் பரப்புரையை மேற்கொள்வார்கள்.
7.போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் தொலைகாட்சி நிகழ்ச்சியில் நேருக்கு நேர் விவாதம் செய்வர்.
8.மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் சபை பிரதிநிதிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு உண்டு.
9.இவர்கள் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவர்.
10.பாதிக்கும் அதிகமாக வாக்குகளை பெறுபவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
11.வெற்றியாளர் தேர்வான பிறகு ஜனவரி மாதம் அதிபர் மற்றும் துணை அதிபர் பதவி ஏற்பார்கள்.
இந்திய நேரப்படி காலை பத்து மணிக்கு ஆரம்பித்த தேர்தல் மாலை ஆறு மணிக்கு முடிந்தது. இந்த வாக்குப்பதிவுகள் சர்வதேச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டொனால்டு டிரம்பும் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர் இதில் டிரம்ப் வாக்குகள் பெற்று அதிபரானார்.
டொனால்டு டிரம்ப் – ஜோ பிடன்:
டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலதிபரும் அரசியல்வாதியும் வது அதிபரும் ஆவார் ஆம் ஆண்டு நடைப்பெற்ற அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
டொனால்டு டிரம்ப் 2000 ஆம் ஆண்டில் இருந்தே அரசியல் களத்தில் இருக்கிறார்
மே 2016இல் இவரை எதிர்த்த அனைவரும் போட்டியிலிருந்து விலகியதால், குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இவர் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் சிறு வேடங்களில் நடித்து ஏற்கனவே மக்களிடையே பிரபலம் அடைந்திருந்தார்.
ஜோ பிடன் ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை அமெரிக்காவின் 47 வது துணை அதிபராக இருந்தவர் 1988ஆண்டு மற்றும் 2008 ஆண்டு ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் தோல்வியுற்றார். பிடன் வித்தியாசமாக இம்மமுறை துணை அதிபருக்கு ஒரு பெண்ணை தேர்வு செய்யவுள்ளதாக கூறினார் ஒரு வேலை பிடன் வெற்றி பெற்றால் அவரது துணை அதிபர், ஐக்கிய அமெரிக்க வரலாற்றின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையைப் பெறுவார்.
அமெரிக்காவில் முதல் வாக்குப்பதிவு எங்கே தொடங்கும்?
ஒன்பது நேர மண்டலங்களைக் கொண்டுள்ள அமெரிக்காவின் மாகாணத்தில் ஈஸ்டர்ன் டைம் நேர மண்டலத்தைக் கொண்டுள்ள கிழக்கு மாகாணத்தில் தேர்தல் தொடங்கும்.
கிழக்கு மாகாணத்தின் வெர்மாண்ட் பகுதியில் முதன் முதலில் வாக்குப்பதிவு தொடங்கும்.
12 பேர் மட்டுமே வசிக்கும் டிக்ஸ்வைல் நாட்ச் நகரமே முதன்முதலில் தேர்தல் முடிவை வெளியிடும் நகரமாக உள்ளது.
தேர்தல் முடிவுகள் எப்போது தெரியும்?
அமெரிக்காவில் வாக்கு எண்ணிக்கை முடிய பல நாட்கள் ஆகும் என்றாலும் தேர்தல் முடிந்த மறுநாளே யார் வெற்றி பெறுவார் என கணித்து விட முடியும்.
இருந்த போதிலும் இம்முறை கொரோனா அச்சுறுத்தலால் நிறைய மக்கள் தபால் ஓட்டுக்களையே போட்டுள்ளதால் இம்முறை முடிவுகள் கால தாமதம் ஆகலாம்.
அமெரிக்காவின் தேர்தலை உலகம் உற்று நோக்க காரணம்
டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே 2016ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர். மறுமுறை களம் இறங்குகிறார். ஏற்கனவே இவர் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். கடந்த ஆண்டின் இறுதியில் நாடாளு மன்றத்தில் இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.
ஜோ பிடனுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா களம் இறங்கியுள்ளார்.
துணை அதிபராக முதன் முறையாக பெண் வேட்பாளரான கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.