ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரம் :
இலங்கை-நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் எல்லை தண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறிய நிலையில், ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
Read more – சிங்கப்பூரில் எனக்கு ஹோட்டல் இருப்பதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் : கடம்பூர் ராஜு சவால்
இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரிட்டன், கனடா உள்ளிட்ட 6 நாடுகள் இணைந்து தீர்மானம் கொண்டு வந்தனர். இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் நேற்று நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.