கடலுக்கு அடியில் செக்ஸ்.. இதற்காக தான் ஐந்தாண்டுகள் காத்திருந்தோம் என பேட்டி

உருமறைப்புக் குழுவினர் (camouflage groupers) என்று அழைக்கப்படும் இனத்தைச் சேர்ந்த மீன்களின் கலவி தான் தற்போது பெரும் புகழை அடைந்துள்ளது.

பசிபிக் பெருங்கடலின் ஃபகரவா தீவுகளில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் லாரன்ட் பல்லெஸ்டாவுக்கு இந்த ஆண்டின் மிக உயரிய விருதான வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீன்களின் கலவி பற்றிய புகைப்படம் குறித்து தெரிவிக்கும் போது “இது வலிமையான தொழில்நுட்பம்” என்று பாராட்டுகிறார் தேர்வுக் குழுவின் தலைவர் ரோஸ் கிட்மன் காக்ஸ்.

“இந்தப் புகைப்படம் முழு நிலவு நாள் அன்று எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது”

உருமறைப்பு குழுக்கள் எனப்படும் இவ்வகை மீன்களின் வருடாந்திர இனப்பெருக்கம் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் நிகழும். இந்த நிகழ்வில் பல்லாயிரக் கணக்கான மீன்கள் வரை குறிப்பிட்ட இடத்தில் கூடுகின்றன. அதே நேரத்தில் இந்தத் தருணத்துக்காகவே அவற்றை வேட்டையாடி உண்பதற்காக பல சுறாக்களும் காத்திருக்கின்றன.

சுறாக்கள் மட்டுமல்லாமல், அளவுக்கு அதிகமாக மீனவர்கள் மீன்பிடிப்பதும் இந்த மீன் இனத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. இந்த புகைப்படம் அவற்றுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஓர் இடத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வகை மீன்களின் இனப்பெருக்க நேரம் ஓராண்டில் குறிப்பிட்ட முழுநிலவு இரவில், சுமார் ஒரு மணி நேரத்தில் தொடங்கி முடிந்துவிடும்.

“இந்த குறிப்பிட்ட தருணத்துக்காக நாங்கள் இதே இடத்தில் ஐந்து ஆண்டுகள் சுமார் 3,000 மணி நேரம் நீருக்குள் மூழ்கியிருந்தோம்” என்று கூறுகிறார் புகைப்படத்தை எடுத்த கலைஞர் லாரன்ட் பல்லெஸ்டா.

Exit mobile version