இந்தோனேசியா பாண்டன் மாகாணத்தில் உள்ள சிறையில் மின்கசிவால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 122 சிறைக் கைதிகள் இருந்ததாகவும் அதில் 41 பேர் பலியாகினர். காயமடைந்த மேலும் 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்தின் காரணம் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.