குடும்பத்தைப் பராமரிக்க வருமானம் போதாமல் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகிறது
.இங்கிலாந்து நாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மாதம் தோறும் கிடைக்கும் சம்பளம் போதவில்லை என்பதாலும் அவர் குடும்பத்தை நடத்த அந்தச் சம்பளம் போதவில்லை என்பதாலும் அப்பதவியை அவர் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இங்கிலாந்து பிரதமராக போரிஸ் ஜான்சான் பதவி ஏற்றும் முன்னதாக அவருக்கு ரூ. 4 கோடியே 70 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் கிடைத்ததாகவும் ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சியில் பிரதமராகப் பதவியேற்று இங்கிலாந்தின் பிரதமரான பின் அவருக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் மட்டுமே சம்பளம் கிடைப்பதாகவும் தெரிகிறது.
அவருக்கு ஆறு குழந்தைகள் உள்ளதால் அவருக்கு கிடைக்கும் வருமானம் போதாது என்ற காரணத்தாலும் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக வுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.