இந்திய அமெரிக்கர்கள் டிரம்புக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக தகவல்.
உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு தேர்தல் அமெரிக்க அதிபர் தேர்தல்.
இந்த முறை குடியரசுக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டாவது முறை போட்டியிடுகிறார் டிரம்ப்.
இவரை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுவது ஜோ பிடன்.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் காரசாரமாக புகார் தெரிவித்து விவாதத்திலும் பங்கேற்றனர்.
இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதால் ஐஏஏஎஸ் என்ற அமைப்பு இந்திய அமெரிக்கர்களிடம் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது.
அதில், சுமார் 56% பேர் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பிடனுக்கு ஆதரவாக உள்ளதாகவும், 15 % மட்டுமே குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்புக்கு ஆதரவாக உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
சமீபத்தில் அமெரிக்காவில் இனப்படுகொலை உள்நாட்டுக் கலவரம் கொரோன தடுப்பவதில் கவனமின்மை ஆகிய காரணத்தால் டிரம்புகு எதிராக வாக்குகள் பதிவாக வாய்ப்புகளுண்டு என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.