குறிப்பிட்ட சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் விலையில், தெற்கு ரயில்வே சலுகைகளை அறிவித்துள்ளது.
ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தே போன்ற ரயில்களில் முன்பதிவை அடிப்படையாக கொண்டு டிக்கெட் கட்டணத்தில் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய ரயில்வேயின் அதிவேக ரயில்களாக கருதப்படும் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில்களில் ரயில்வே வாரியத்தின் முடிவை தொடர்ந்து கட்டண சலுகை அறிவிக்கப்படுகிறது. அதன்படி, முன்பதிவில் குறிப்பிட்ட ரயில்களில் 60 சதவிகித இருக்கைகள் மட்டுமே நிறைவாகி இருந்தால், டிக்கெட் கட்டணத்தில் 20 சதவிகித தள்ளுபடியும், 70 முதல் 80 சதவிகிதம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தால் 10 சதவிகித தள்ளுபடியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தள்ளுபடிகள் பயண தேதிக்கு 4 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு செய்யப்பட்டுள்ள டிக்கெட்டுகளின் அளவை பொறுத்து நடைமுறையில் வரும். இந்த தள்ளுபடி, நவம்பர் 15ம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.