சாம்சங் நிறுவனம் தனது ஃபோல்டபிள் மொபைல் ஃபோன்களுக்கான காப்புரிமையை பெற்றுள்ளது.

சாம்சங் நிறுவனம் தனது புதிய மொபைல் ஃபோனிற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருந்தது. இந்த புதிய ஸ்மார்ட்ஃபோனின் டிஸ்பிளே பெரியதாகவும், அளவில் பெரியதாகவும், அதிக எண்ணிக்கையிலான கேமராக்கள் போன்றவை சிறப்பம்சங்களாக கொண்டிருக்கும் என தெரிகிறது.
இந்த ஃபோல்டபிள் ஃபோனிற்கான காப்புரிமை வேண்டி இந்த ஆண்டு ஜூன் மாதம் சாம்சங் நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மடிக்கக்கூடிய எலக்ட்ரானிக் சாதனம் எனும் பெயரில் விண்ணப்பிக்கப்பட்டுள்ள இதற்கு இந்த மாதம் 10ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்ஃபோன் சாம்சங் நிறுவனத்தின் மூன்றாவது ஃபோல்டபிள் ஃபோன் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இசட் போல்ட் ஸ்மார்ட் ஃபோனில் 6.2 இன்ச் திரை மற்றும் 7.6 இன்ச் திரையுடன் அறிமுகம் செய்தது.
READ MORE- ரியல்மீ எஸ் சீரிஸ் வாட்ச் வெளியீட்டு தேதி எப்போது?
தற்போது காப்புரிமை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்ஃபோனில் ஹின்ஜ் ப்ளக்ஸ் மோட், ஜீரோ கேப், பிரைமரி மாட்யூல், எல்இடி ஃப்ளாஷ், உள்புற பன்ச் ஹோல் போன்றவை இருக்காது என கூறப்படுகிறது.




