புதுக்கோட்டை அமமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் காளை மாடு புகுந்ததால் தொண்டர்கள் பயந்து ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை :
வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி தேர்தல் என்பதால் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் பிற கட்சிகளை குறை கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர்.தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.
அதேபோல், நடிகர் கமல் ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைந்து முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது.
இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்வக்கோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் பரப்புரையில் ஈடுபட்டபோது கூட்டத்தில் காளைகள் புகுந்ததால் பயத்தில் பொதுமக்கள் சிதறி ஓடினர். இதனால் குடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.