திமுகவின் வாகனத்தை வழிமறித்து பேனரை கிழித்த அதிமுகவினர்… தமிழகம் கண்ட ஆரோக்கிய அரசியல் இதுதானா ?

திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுகவின் வாகனத்தை வழிமறித்து பேனரை கிழித்த அதிமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதியில் (தனி) திமுக கூட்டணி சார்பில் ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் களமிறங்கிக்கிறார். இந்தநிலையில் அவரை ஆதரித்து திமுக கிளை செயலாளர் நாகராஜ் பரப்புரை வாகனத்தில் பிரச்சார பாடலை ஒலித்தபடி, புஞ்சைதாமரைக்குளம் பகுதியில் நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்பொழுது திடீரென இருசக்கர வாகனத்தில் பின்னாடி வந்த சில அதிமுகவினர், பரப்புரை வாகனத்தை வழிமறித்து பரப்புரை பாடலை நிறுத்துமாறு எச்சரித்துள்ளனர். மேலும், அந்த வாகனத்தை ஓட்டிவந்த வெங்கடேஷ் கையில் இருந்த வாகனத்தின் சாவியையும் புடுங்கியுள்ளனர்.

Read more – வாக்குப்பதிவு எந்திரத்தை திருடி காரில் பதுக்கிய பாஜக வேட்பாளர் : அசாமில் தொடரும் பரபரப்பு

இதையடுத்து, பரப்புரை பாடலை அணைத்துவிட்டு போய்விடுகிறோம் என கூறி சாவியை தரும்படி டிரைவர் மற்றும் கிளைச் செயலாளர் இருவரும் கேட்டநிலையில் கையிலிருந்த சாவியின் மூலமாகவே பரப்புரை வாகனத்தில் இருந்த பிளக்ஸ் பேனர்களை கிழித்துவிட்டு சாவியை கொடுத்த அந்த நபர் பைக்கில் சிட்டாய் பறந்து விட்டதாக கூறப்படுகிறது, இதுகுறித்து திமுகவினர் அழைத்து புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version