பூம்புகார் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் 50 வாக்குகள் அதிகமாக பதிவு… மீண்டும் மறுவாக்குபதிவு நடத்த கோரிக்கை..

பூம்புகார் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் 50 வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளதால் மறுவாக்குபதிவு நடத்த கோரிக்கை எழுந்து வருகிறது.

பூம்புகார் :

பூம்புகார் தொகுதியில் உள்ள திருவாவடுதுறை அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட 175 ம் எண் வாக்குச்சாவடியில் மொத்தம் 578 வாக்குகள் மட்டுமே உள்ளதாக வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தது.

ஆனால் இந்த வாக்குச்சாவடியில் 628 வாக்குகள் அதிகமாக பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி சந்தேகம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் எப்படி 50 வாக்குகள் கூடுதலாக பதிவாகியது என்று நேற்று விடிய விடிய போராட்டம் நடத்தினர். இதையடுத்து மேலும், போராட்டம் வலுவடையாமல் இருக்க காவல் துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

Read more – நாடுமுழுவதும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் : முதல்வர்களுடன் இன்று மாலை பிரதமர் ஆலோசனை

தொடர்ந்து, மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டபோது, மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து 175 ம் எண் வாக்குச்சாவடியில் மட்டும் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேட்பாளர்கள் முகவர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

Exit mobile version