மக்கள் நீதி மய்யத்தில் இருந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி விலகுவதாக முகப்புத்தகத்தில் கருத்தை பதிவு செய்துள்ளனர்.
சென்னை :
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஜல்லிக்கட்டு புரட்சியில் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சி மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு 10 முதல் 15 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்தது. மேலும், எத்தனை தொகுதி வரை ஒதுக்கப்பட்டு விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில், தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு முதற்கட்டமாக மக்கள் நீதி மய்யம் 4 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கி இருந்தது. தற்போது, இந்த கூட்டணியில் உடன்பாடு எட்டப்படாததால் மக்கள் நீதி மய்யம் கூட்டணியிலிருந்து இருந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி விலகியுள்ளது.
இதுகுறித்து , தமிழ்நாடு இளைஞர் கட்சி தங்களது முகப்புத்தகத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், நல்லவர்கள் கூடாரம் குழப்பவாதிகள் கூடாரம் ஆகிறது என்ற நெருடலும்…. இளைஞர்களின் நம்பிக்கையை அங்கு அடகு வைக்க தேவையில்லை என்று மக்கள் நீதி மய்யம் உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.