தமிழகம் முழுவதும் திமுகவினருக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
சென்னை :
தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் நேற்று இரவு 7 மணியுடன் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டனர். கடைசி நாள் பிரச்சாரம் என்பதால் மக்களை கவர அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Read more – வாக்காளர்களுக்கு மோடி புகைப்படத்துடன் கூடிய தங்க நாணயம்… காவல்துறையில் சிக்கியதால் பரபரப்பு..
இந்தநிலையில், தமிழகம் முழுவதும் திமுகவினருக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஊரிலும் மிகப்பெரிய எழுச்சியும் வரவேற்பும் தந்த தமிழக மக்களுக்கு உணர்வுபூர்வமான நன்றி தெரிவித்தார். மேலும், இம்முறை திமுக கூட்டணிக்கு வாய்ப்பு தாருங்கள். உதயசூரியன் உதயமாகட்டும்! இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம். நம் தாய்த் தமிழ்நாட்டை மீண்டும் தலைநிமிரச் செய்வோம் என்று தெரிவித்திருந்தார்.