வேளச்சேரி 92 ம் எண் வாக்குச்சாவடியில் விறுவிறுப்பான மறுவாக்குப்பதிவு…

வேளச்சேரி 92 ம் எண் வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

சட்டமன்ற தேர்தல் நடந்த ஏப்ரல் 6 ம் தேதி இரவு வேளச்சேரி தொகுதிக்கு உள்ள வாக்குச்சாவடி எண் 92 ல் வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுச்சாவடி மையத்தில் இருந்து 3 ஊழியர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றதால் அந்த 3 ஊழியர்களும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

அங்கு எடுத்துவந்த வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது என்றும், அதில் 15 ஓட்டுகள் பதிவாகி இருந்ததால் மறுவாக்குப்பதிவு 17 ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாகு தெரிவித்தார்.

Read more – இன்றைய ராசிபலன் 17.04.2021!!!

இந்தநிலையில், வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 92 வது வாக்குச்சாவடியில் 548 ஆண் வாக்களர்களுக்கான மறு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version