சாதியை பார்க்காதீங்க… சாதிப்பவனை பாருங்க, ஓட்டு போடுங்க…. கோவையில் களமிறங்கிய கமல்

சாதி பார்த்து ஓட்டு போடாமல் சாதிப்பவனை பார்த்து ஓட்டு போடுங்கள் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் ஆட்சியில் அமர தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ற ஒற்றை முழக்கத்துடன் மக்களின் மனதை கவர புதிய புதிய வாக்குறுதிகளை வேட்பாளர்கள் வழங்கி வருகின்றனர்.

இந்தநிலையில், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன், அதற்கு முன்பு மக்களோடு மக்களாக நடைப்பயிற்சி மேற்கொண்டார். தேவர்பிலிம்ஸ் சாண்டோ சின்னப்பா தேவர் தொடங்கிய உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற அவர், சிலம்பம் சுற்றி அசத்தினார். தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பார்வையிட்டு, லாரிப்பேட்டையிலுள்ள மீன் மார்க்கெட் பகுதியில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

Read more – நான் ஆட்சிக்கு வருவேன்… நிச்சயம் அடியை திருப்பி தருவேன்… வேகமெடுக்கும் சீமான் பேச்சு..

அப்பொழுது பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல் சாதி பார்த்து ஓட்டுப் போடாதீர்கள், சாதிப்பவனைப் பார்த்து ஓட்டுப் போடுங்கள். நிச்சயம் மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் ஆட்சி அமைத்து மக்களுக்கு நல்லதொரு வாழக்கையை அமைத்து தரும். டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து, உங்களாகிய என்னை ஆட்சியில் அமர்த்துங்கள் என்று தெரிவித்தார்.

Exit mobile version