தமிழ் நாட்டில் மு.க. ஸ்டாலினை தவிர மக்கள் அனைவரும் நிம்மதியாக இருக்கிறார்கள் – அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழ் நாட்டில் மு.க. ஸ்டாலினை தவிர மக்கள் அனைவரும் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி :

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த நாச்சியார்பட்டியில் அம்மா நகரும் நியாய விலை கடை, கூட்டுறவு சங்கம் மற்றும் பயிர்க்கடன் ரத்து போன்ற திட்டங்களை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு பேசிய அவர், தமிழ் நாட்டில் மு.க. ஸ்டாலினை தவிர மக்கள் அனைவரும் நிம்மதியாக இருக்கிறார்கள் என்றார். திமுக ஆட்சி போன்று, சட்டம் ஒழுங்கு அதிமுக ஆட்சியில் கெட்டுப் போகவில்லை. நில அபகரிப்பு இல்லை, மின்வெட்டு இல்லை என்றும்,  எதுவெல்லாம் இருக்கக் கூடதோ அது எல்லாம் இல்லை என்ற நிலையை முதல்வர் உருவாக்கியுள்ளார்.

Read more – மோடி அரசு நண்பர்களின் பாக்கெட்டை நிரப்பி.. மக்களை மேலும் ஏழ்மை நோக்கி திருப்பி… ராகுல் காந்தி ட்வீட் 

தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து இல்லை ,வன்முறை இல்லை.திமுக ஆட்சி காலத்தில் 15 மணி நேர மின்வெட்டு காரணமாக இருண்ட தமிழகமாக இருந்தது. இதனால் விவசாயம், தொழில்துறை பாதிக்கப்பட்டது. தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்கும் நிலையில் உள்ளது. ஒளிமயமான தமிழகத்தினை உருவாக்கியுள்ளோம் அந்த சிறப்பு தமிழக முதல்வரையே சாரும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், திரைப்படமும் சுதந்திரமாக செயல்படுகிறது என்று தெரிவித்தார்.

Exit mobile version