தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள திமுகவினர் மனுவை அளிக்க அண்ணா அறிவாலயத்தில் குவிந்து வருகின்றனர்.

சென்னை :
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மிகப்பெரிய ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் தேர்தல் என்பதால் தேர்தல் களம் தொடர்ந்து சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மேலும், எந்தந்த கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்க உள்ளனர் என்ற பதட்டமும் நிலவி வருகிறது.
இந்தநிலையில், அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகள் சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்றும், அதற்கான தேதியை அறிவித்தும் தலைமையிடம் உத்தரவிட்டது. அதன்படி, இன்று இதற்கான விண்ணப்ப மனுக்களை பெறுவதற்காக ஏராளமான தி.மு.க.வினர் இன்று சென்னை தேனாம் பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் குவிந்துள்ளனர்.
Read more – கிரண்பேடியை பதவியில் இருந்து நீக்கியது பா.ஜ.க.வின் கபட நாடகம் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து இன்று முதல் தலைமை கழகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பொது வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோர் ரூபாய் 25 ஆயிரம் செலுத்த வேண்டும். மகளிர் மற்றும் தனித்தொகுதியில் போட்டியிடுவோரும் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூபாய் 15 ஆயிரம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, விண்ணப்ப மனுக்களை பெற்றவர்கள் 24-ந்தேதிக்குள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




