வாக்கு எந்திரங்கள் உள்ள மையங்களை தினமும் 5 முறை ஆய்வு செய்ய வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை :
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு வெளியில் துப்பாக்கி இந்திய ராணுவ படையினர், ஆயுத படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் என்ற மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல், ஸ்ட்ராங் ரூம் என்று அழைக்கப்படும் அறைக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரம் பார்வையிட எல்இடி திரையும் வைக்கப்பட்டுள்ளது.
Read more – பெருமைக்காக ஓட்டு போடல.. கடமைக்காக ஓட்டு போட்டேன்.. சமுத்திரக்கனியின் ‘நச்’ பதில்
இந்தநிலையில், வாக்கு எந்திரங்கள் உள்ள மையங்களை தினமும் 5 முறை ஆய்வு செய்ய வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஸ்ட்ராங் ரூம் கதவில் சீல் உடைக்கப்பட்டுள்ளதா, கண்காணிப்பு கேமரா சரிவர இயங்குகிறதா, காவல் துறையினர் சரியாக பணிகளை மேற்கொள்கின்றனரா என்று ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார்.