ஜெயலலிதா_செலுத்தாத வரிபாக்கி ரு36 கோடியை தமிழக அரசு கட்டியதை எதிர்த்து ஆம்ஆத்மிகட்சி மாநில தலைவர் வசீகரன் இன்று சென்னை உயர்நீமன்றத்தில்வழக்கு இதனை ஆம் ஆத்மி மாநில செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
இதைப் பற்றி ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு.மாநில செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:மக்கள் பணத்தை எடுத்து தமிழக அரசு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரண்டாவது நினைவு மண்டபம் “வேதா இல்லத்தில்” எழுப்புகிறார்கள் அதற்காக மக்கள் பணத்தை 67 கோடி 90 லட்சம் செலவிடுகிறார்கள். ஏற்கனவே சென்னை மெரினா கடற்கரையில் 50 கோடி ருபாய் செலவில் நினைவு மண்டபம் அரசு செலவில் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா செலுத்தாத கட்ட தவறிய வருமான வரி சொத்து வரி பாக்கி 36 கோடி ரூபாயை மக்கள் கஷ்டபடும் கொரானா ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு மக்களின் பணத்தை எடுத்து செலுத்தியது தவறான முன்னுதாரனம் இதனை எதிர்த்து இன்று ஆம்ஆத்மிகட்சி மாநிலத் தலைவர் S.A.N.வசீகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.