தூத்துக்குடி அருகே நாட்டு வெடிகுண்டு வீசி காவலர் சுப்பிரமணியை படுகொலை செய்த துரைமுத்து என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை பகுதியை சேர்ந்த துரைமுத்து என்பவன் மீது 2 கொலை வழக்கு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவன் ஸ்ரீவைகுண்டம் வனப்பகுதியில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையில் காவலர்கள் அந்த பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது தப்பிக்க முயன்ற துரைமுத்துவை காவலர்கள் மடக்கி பிடிக்க முயன்றபோது அவன் காவலர்கள் மீது நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசியுள்ளான். வெடிகுண்டு வெடித்தத்தில் காவலர் சுப்பிரமணியன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒரு காவலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் குற்றவாளியை உடனடியாக பிடிக்க உத்தரவிட்டார். அதைதொடர்ந்து நடைபெற்ற, காவலர்களின் தீவிர தேடுதல் வேட்டையில் துரைமுத்து தப்பிக்க முயன்றபோது போலீசார் அவனை சுட்டத்தில் படுகாயமடைந்த அவன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அவனது கூட்டாளிகள் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து இவர்களுக்கு எவ்வாறு ஆயுதங்கள் கிடைத்து? மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்