சென்னையில் குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் நண்பரின்கண்களை குச்சியால் குத்தி வெளியே எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
.தென்காசி மாவட்டம் கல்லத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அசோகச் சக்கரவர்த்தி வயது 29 பெரிய பாண்டியன் வயது 26. அசோகச் சக்கரவர்த்தி திருவான்மியூரில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். பெரிய பாண்டியன் தேனாம்பேட்டையில் டீ கடையில் பணியாற்றி வந்தார். அசோகச் சக்கரவர்த்தி குடிபோதையில், பெரிய பாண்டியன் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெரிய பாண்டியன், அசோகச் சக்கரவர்த்தியை அடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் மெரினா கடற்கரைக்கு வந்து மது அருந்தினர். அப்போது அசோகச் சக்கரவர்த்தி, பெரிய பாண்டியனின் தாய் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திர
மடைந்த பெரியபாண்டியன் பாட்டிலை உடைத்து அசோக சக்கரவர்த்தியின் கழுத்தில் குத்தினார். ஆத்திரம் தீராத அவர் அசோகச் சக்கரவர்த்தியின் இரண்டு கண்களையும் குச்சியால் குத்தி வெளியே எடுத்தார். பிறகு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பெரிய பாண்டியன் தொடர்புகொண்டு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். இதையடுத்து மெரினா போலீசார் பெரிய பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்த அசோகச் சக்கரவர்த்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.