தமிழகத்தில் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியதாவது ;
தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கி வந்த வழக்கமான மண்ணெண்ணெய் அளவில் இருந்து தற்போது 20% மட்டுமே ஒதுக்கி வருவதாக நேற்று அறிவித்தது. அதன் அடிப்படையில், நுகர்வோருக்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் அளவையும் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Read more – தமிழகம் முழுவதும் மறுவாக்குப்பதிவு நடத்திட வேண்டும்… டெல்லியில் போராடிய மநீம வேட்பாளர்..
இதுகுறித்து பொதுமக்களிடம் இருந்து புகார் வருவதை தவிர்ப்பதற்காக மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவு குறித்து கடைகளில் விளம்பரம் செய்யப்பட வேண்டும் என்றும் பொதுமக்களிடம் இந்த தகவலை நேரடியாக தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.