9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு… மாநில தகவல் ஆணையம் பரிந்துரை..

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பில் இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என்று மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை, கேள்வித்தாள் வடிவமைப்பில் குளறுபடி மற்றும் தேர்வு எழுதிய நபர்கள் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பில் இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது மாநில தகவல் ஆணையம் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

Read more – பெருமாள் வேடத்தில் காட்சியளித்த நித்தியானந்தா.. நித்தியின் லீலைக்கு பக்தர்கள் கண்டனம்..

மேலும், தலைமை செயலாளருக்கு மாநில தகவல் ஆணையம் அளித்த அறிக்கையில், ககர்லா உஷா, ஜெகநாதன், சீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா, சுர்ஜித் சவுத்ரி, விபூ நாயர் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்க பரிந்துரை செய்தது.

கடந்த 2011 ம் ஆண்டு முதல் 2020 வரை பணியாற்றிய 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் மாநில தகவல் ஆணையம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version