மதுபான விற்பனையில் முதல் மாநிலத்தின் பட்டியல் வெளிவந்துள்ளது. இதில் தமிழகம் 2-வது இடம் பிடித்துள்ளது.
பெங்களூரு:
மாநில கலால்துறை சார்பில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நாட்டின் தென்பகுதியில் உள்ள கர்நாடகம், தமிழகம், ஆந்திரா, கேரள மாநிலங்களில் மதுபான விற்பனை தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களை விட மக்கள் தொகையில் குறைவான உள்ள கர்நாடகாவில் அதிகம் மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.
கர்நாடகாவில் தனி நபர் ஆண்டுக்கு 7.920 லிட்டர் மதுபானம் குடிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 6,610 லிட்டர் மதுபானம் பயன்படுத்துவதன் மூலம் தமிழகம் 2-வது இடத்திலும், 5,710 லிட்டர் பயன்படுத்துவதன் மூலம் கேரள மாநிலம் 3-வது இடத்திலும், 5,020 லிட்டர் பயன்படுத்துவதன் மூலம் ஆந்திர மாநிலம் 4-வது இடத்தில் உள்ளது.
அதேபோல் மதுபான விற்பனையிலும் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. 6.27 கோடி மக்கள் தொகையுள்ள கர்நாடகாவில் ஆண்டுக்கு 4,837.54 லட்சம் லிட்டர் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. 7.21 கோடி மக்கள் தொகையுள்ள தமிழகத்தில் 4,765.91 லட்சம் லிட்டரும், 8.45 கோடி மக்கள் தொகை உள்ள ஆந்திர மாநிலத்தில் 4,239.04 லட்சம் லிட்டரும், 3.34 கோடி மக்கள் தொகையுள்ள கேரளாவில் 1,905.81 லட்சம் லிட்டரும் விற்பனை செய்யப்படுகிறது.
Read more – இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்க முடியாது : பிரசாத் ஸ்டூடியோ திட்டவட்டம்
மாநிலத்தில் உள்ள 6 கலால் துறை மண்டலங்களில் மதுபான விற்பனை ஒப்பிடும்போது பெங்களூரு முதலிடத்தில் உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.தமிழகத்தை பொறுத்த வரை அரசின் டாஸ்மாக் நிறுவனம் மதுக்கடைகளை நடத்தி வருகிறது. 6800 மதுக்கடைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. அவற்றுடன் 4271 மது பார்களும் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 28 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
அரசுக்கு அதிக வருவாய் தரும் நிறுவனமாக டாஸ்மாக் உள்ளது. டாஸ்மாக் கடைகள் மூலம் தினமும் சராசரியாக, 65 கோடி ரூபாய்க்கும், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில், 90 கோடி ரூபாய்க்கும், பண்டிகை நாட்களில், 120 கோடியை தாண்டியும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு மது விற்பனையில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் முதல் இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.