நாட்டுக்கு வாக்குகளா முக்கியம்… கர்ணன் ‘ஷோ’க்கு டிக்கெட் தான் முக்கியம்.. திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்

நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படத்தின் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில் திரையரங்குகளை நோக்கி ரசிகர்கள் படையெடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ( ஏப்.6) நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. அதேபோல், 234 தொகுதிகளிலும் மாலை 7 மணி நிலவரப்படி 71.79 சதவீதமாக வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவலும் கிடைத்தது.

நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் வரும் ஏப்ரல் 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற அதே வேளையில் இந்த திரைப்படத்தின் முன்பதிவும் நேற்று தொடங்கியது. இதனால் பல இடங்களில் ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு முதல் காட்சிக்காக டிக்கெட்களை பெற்றனர்.

Read more – தேர்தல் முடிவுக்கான பிந்தைய கருத்துக்கணிப்பை ஏப்ரல் 27 வரை வெளியிட தடை : இந்திய தேர்தல் ஆணையம்

வாக்குச்சாவடி மையங்களில் நேற்று கூட்டம் இருந்ததோ இல்லையோ, திரையரங்குகளில் டிக்கெட்களை பெற ரசிகர்கள் அலைமோதியதால் தேர்தல் ஆணையமே ஸ்தமித்து வேடிக்கை பார்த்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version