மக்கள் எங்கு செல்கின்றனர் என கண்காணிப்பதற்கு இ-பாஸ் அவசியம் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மாவட்ட வாரியாக ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இன்று கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்,
தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கடுமையான நடவடிக்கையை எடுத்து வருவதாகவும், அதிகளவு கொரோனா பரிசோதனைகள் செய்வதன் காரணமாக தொற்று கட்டுக்குள் உள்ளதாகவும், உரிய சிகிச்சைகள் அளிக்கடுவதால் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் விளக்கமளித்தார்.
கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்திற்கும் அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றுள்ளதாகவும், அங்கு கொரோனா தடுப்புக்காக 39 நடமாடும் மருத்துவக்குழுக்கள் செயல்படுகின்றன செயல்படுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்
மாவட்டத்தில் இதுவரை, முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் 9,965 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது,
3 ஆண்டுகளில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1,114 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார். மேலும், கடலூர் மாவட்டத்தில்தான் அதிகளவு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, நீட் தேர்வு, இ-பாஸ் தொடர்பான கேள்விகளுக்கு முதலமைச்சர் கூறியதாவது:
மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும் விதமாகவே, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தாக்கம் குறைந்தபின் நீட் தேர்வு நடத்துமாறு பிரதமருக்கு தான் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளதாகவும், யார் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை இ-பாஸ் முறை இருந்தால்தானே கண்டறிய முடியும் என விளக்கமளித்தார்.