சென்னையில் உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில், மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றார்.
சென்னைத் தலைமை அலுவலகத்தில் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் இன்று திடீரென்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்கு சென்ற மூத்த அமைச்சர்கள், அங்கு துணை முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதில், தேனி மாவட்டத்தில் ஒட்டப்பட்ட ‘ஓ.பி.எஸ்.தான் அடுத்த முதல்வர்’ என்ற போஸ்டர்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. அப்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர்கள் சமாதானப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அவரது கருத்தை முதல்வர் பழனிசாமியிடம் தெரிவிக்கின்றனர். ஆலோசனை குறித்து மாலையில் அறிக்கை வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.