நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கத்தில் உள்ள அவரின்வீட்டின் முன்பு அவரது கட்சியினர் களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டுள்ளார். சமூக நீதி மற்றும் தேசத்துக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என அந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
குரோனா காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தனிமனித இடைவெளியுடன் முகக்கவசம் அனைத்தும் அணிந்தபடி இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான்,
”இந்தி, இந்தியா இதை கட்டமைப்பது தான் மத்தியஅரசு ஆட்சியாளர்களின் எண்ணம் அதற்குத் தகுந்தாற்போல் கல்விக் கொள்கையை நம்மிடையே திணிக்க முயல்கிறார்கள் மூன்றாவது மொழியாக இந்தி படித்தால் மட்டுமே தேசிய ஒருமைப்பாடு உருவாகும் என்கிறார்கள் நம். கவிஞர் கபிலன் எழுதிய கவிதை போல ‘அந்தி வந்தால் நிலவு வரும் இந்தி வந்தால் பிளவு வரும்’ என்பதை அவர்கள் இந்த நேரத்தில் புரிந்து கொள்ள வேண்டும். பல மொழிகள் என்றால் மட்டுமே ஒரே நாடாக இருக்கும். ஒரு மொழி தான் வேண்டுமென்றால் பலநாடுகள் புதிதாய் பிறக்கும் இதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த செய்தியை நம் தமிழ் சொந்தங்கள் அனைவரும் அன்பு கூர்ந்து கவனிக்கவும், நம்மை பெற்ற தாயை மதிக்காத உறவுகளிடம் நமக்குப்பற்று வருமா? நாம்தாய்க்கும் மேலாக நேசிக்கின்ற மொழி நம்தாய்மொழி அதனை மதிக்காத தேசத்தின் மீது நமக்கு பற்று வருமா?
எல்லா தேசிய மாநில மொழிகளையும் ஒழித்துவிட்டு ஒரே மொழியை நாடு ஏற்க வேண்டும் என்று நம்மிடம் திணிப்பது ஏன் என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பேரறிஞர் அண்ணா கூறியது போல ஒரு மொழியால் எப்படி தேசப்பற்று வளரும். இந்தியை நாடெங்கும் படிக்க வேண்டும் சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும் என சொல்கிறீர்கள்.தமிழ் என்றால் நாடு முழுதும் படிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் என்று சொல்வீர்களா சொல்லுங்களேன் பார்ப்போம்.மத்திய அரசிற்கு வரலாறு என்றால் கூட அவர்களுக்கு வரை இந்திய வரலாறு தான். வரலாறு என்றால் அவர்களுக்கு வல்லபாய் பட்டேல் மட்டும்தான் ஞாபகம் வரும், நமது தாத்தா வ.உ.சிதம்பரனார் ஞாபகத்திற்கு வருவாரா? வீரப்பெண்மணி என்றால் அவர்களுக்கு ஜான்சி ராணியை தான் சொல்வார்கள் நமது பாட்டி வேலுநாச்சியாரை சொல்வார்களா? இப்படி ஒரு இனத்தின் வரலாறு அழிக்கப்பட்டாலே அந்த இனம் அழிந்துவிடும் சூழ்நிலை உருவாகும் என்பதை மத்திய அரசு தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.