தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன்லைனில் வகுப்புகள் எடுப்பதற்கு குறைந்த அளவு ஆசிரியர்கள் இருந்தாலே போதும் என்பதால், பல தனியார் பள்ளி நிறுவனங்கள் ஆசிரியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது, அதே போல் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற புகார்களும் எழுந்து கொண்டே இருக்கிறது.
இதுதொடர்பாக சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கேரளாவில் அடுத்தாண்டு பள்ளிகள் திறந்தாலும் தமிழகத்தில் பள்ளிகள் தற்போது திறக்க வாய்ப்புகள் இல்லை.மேலும் தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க தனி இணையத்தள வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சம்பளம் வழங்காதது பற்றி தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தால் அரசு பரிசீலிக்கப்படும் . தமிழக அரசு பள்ளிகளில் 1,500 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர்.இதனை தொடர்ந்து வேலையில்லா தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேவைப்பட்டால் அரசு பள்ளியில் தற்காலிக பணியும் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.